திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 17. சத்திநிபாதம் > பாடல்: 1516
The Primal Sakti releases Jiva from enveloping gloom, Rows it across the sea of myriad births, Grants the Grace Abiding; And lands it on the shores of Truth's Bliss United in the Lord of Heavenly Beings, --themselves as yet unfree From Impurity's obscuration.
`ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காதுநின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.