திருமந்திரம் | Thirumanthiram

உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 6

திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 4. துறவு > பாடல்: 1619

The ploughman ploughed; the heavens poured;
And by the ploughman's ploughing, in time it flowered;
The ploughman then to the ploughwoman left,
As unto her eyes the flowers are,
To watch, and guard and tender;
The ploughman thus for ever ceased
All efforts at ploughing further.

உழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026