திருமந்திரம் | Thirumanthiram

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) > பாடல்: 1745

In the quadrilateral Adhara (Muladhara)
Sakti in firmness stands;
In the hexagonal Adhara (Svadhishana)
Sakti is in sleep;
In the circular Adhara (Manipuraka)
Sakti is in agitation;
Of Sakti's Form is Sadasiva.

இலிங்கத்தின் பீடம் நாற்கோணமாயிருப்பின் அது சிவனது இயக்கச் சத்தியாகும். அறுகோணமாய் இருப்பின் அது கிடத்தற் சத்தியாகும். வட்டமாய் இருப்பின் அது இருத்தற் சத்தியாகும். இதனால் சதாசிவன் சத்தி வடிவாய் நின்றே அருள்புரிவான் ஆகலின், சதாசிவ லிங்கமும் அத்தன்மையதேயாம்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, May 22, 2026