திருமந்திரம் | Thirumanthiram

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 17. முத்திரை பேதம் > பாடல்: 1898

Yogi attains siddhis eight
He experiences the divine Nada State;
He is of Karma rid
He is of calm mind
He pursues the Four Ends of Human Goal,
He courses the Sakti Kundalini
Through centres six within the body;
That way he reaches the One
And union in Him attains.

யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். `நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற் பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Wed, Jul 29, 2026