யோகிஎண் சித்தி அருளொலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 17. முத்திரை பேதம் > பாடல்: 1898
Yogi attains siddhis eight He experiences the divine Nada State; He is of Karma rid He is of calm mind He pursues the Four Ends of Human Goal, He courses the Sakti Kundalini Through centres six within the body; That way he reaches the One And union in Him attains.
யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். `நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற் பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.