திருமந்திரம் | Thirumanthiram

குருஎன் பவனே வேதாக மங்கூறும்
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 35. சற்குரு நெறி > பாடல்: 2057

He is Guru Holy,
Who, entranced in bliss
The Vedas and Agamas speaks of,
Enters into Siva Yoga;
And all thoughts stilled,
Removes the bondage of Pasa
And leads you to Lord.

`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Wed, Jul 29, 2026