தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 14. அறிவுதயம் > பாடல்: 2368
I seek in directions eight and two, I seek, in goodness, the Feet of Lord I sing, "Param is my Refuge" I unite in Him, in mind's fulness.
`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.