திருமந்திரம் | Thirumanthiram

நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே. 27

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி > பாடல்: 2538

As nine states beginning with Jagrat are experienced,
Attachment to Malas and Gunas,
That emanate birth, vanish;
In Transcendental Turiya State
Then Void (Satya-Jnana-Podu) succeeds,
Truth and Jnana filled
Where Jiva and Siva one are;
In Turiyas rest
Jiva and Siva are two,
That now in Void is one Manifestness (Svarupa).

மேற்கூறிய முக்கூற்று ஒன்பான் அவத்தைகளில் முதற்கூறாகிய `சீவ அவத்தை` எனப்படும் யோகாவத்தையில் நிற்பினும் பிறப்பு உண்டாகவே செய்யும். அதனால் குரு உபதேசத்தின் வழியாகச் சிவ அவத்தை ஆகிய நின்மலாவத்தையை அடைந்து, `யான், எனது` என்னும் பற்றுக்களை விடுத்து, அப்பற்றுக்கள் சிறிதும் இல்லாத சிவயோகமாகிய உண்மை ஞான வெளியில் நீ அதுவாகி அடங்கி நில். அந்நிலையே சிவ துரியமாகும். அதன்பின் துரியாதீத நிலை எளிதில் கைவர, பரம சிவனை அடையும் உண்மை நிலை உண்டாகும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, May 22, 2026