திருமந்திரம் | Thirumanthiram

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. 4

திருமந்திரம் > முதல் தந்திரம் > 17 அறஞ்செயான் திறம் > பாடல்: 263

Consumption and anaemia, asthma and colic pain--
Such the lot of those who nothing in charity give;
Snake and thunder, sore throat and fleshly ills,
Approach not them that others' needs relieve.

பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையை யும் அவை நோக்கா.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026