திருமந்திரம் | Thirumanthiram

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 3 இலிங்க புராணம் > பாடல்: 347

How Sakti Won the Lord
Of a certain will I espouse
My Lord of Divine Feet thus saying
As Mountain King's daughter incarnate
Sakti performed penances severe;
For all celestial beings to witness,
For all earthly beings to delight,
In adoration intense to Primal Lord Divine.

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026