திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை இரண்டு ஆக இவை ஆறு அதியில். | ஏக னநேக னிருள்கரும மாயையிரண் டாகவிவை யாறாதி யில். |
| பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும். | |