திருவருட்பயன் | Thiruvarutpayan

அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு
வான் நாடர் காணாத மன்.
ஆனா வறிவா யகலா னடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 7

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026