சிவவாக்கியம் | SivaVaakkiyam | full |
| 6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6
| |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 7
| |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ; கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ- நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8
| |
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின் துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 9
| |
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 10
| |
மொத்த பாடல்கள்: 524more to come ..... முன் முகப்பு