சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full

0 காப்பு

மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்
முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்
மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்
கடம்பொழி முக்கட் களிறு.

சோமேசர் முதுமொழி வெண்பா > காப்பு > பாடல்: 0

1 1. கடவுள் வாழ்த்து

சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்
சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு

சோமேசர் முதுமொழி வெண்பா > கடவுள் வாழ்த்து > பாடல்: 1

2 2. வான்சிறப்பு

நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்
துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வான்சிறப்பு > பாடல்: 2

3 3. நீத்தார் பெருமை

அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நீத்தார் பெருமை > பாடல்: 3

4 4. அறன்வலியுறுத்தல்

தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்
தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அறன்வலியுறுத்தல் > பாடல்: 4

5 5. இல்வாழ்க்கை

இல்வாழ் தரும னியற்சந் திரசேனன்
தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.

சோமேசர் முதுமொழி வெண்பா > இல்வாழ்க்கை > பாடல்: 5

6 அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full 6. வாழ்கைத்துணை நலம்

மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்
தூய அனுசுயை சோமேசா - மேவுபிற
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

சோமேசர் முதுமொழி வெண்பா > வாழ்கைத்துணை நலம் > பாடல்: 6

7 7. புதல்வரைபெறுதல்

பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்
சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்
தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > புதல்வரைபெறுதல் > பாடல்: 7

8 8. அன்புடைமை

தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து
தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அன்புடைமை > பாடல்: 8

9 9. விருந்தோம்பல்

பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்
சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > விருந்தோம்பல் > பாடல்: 9

10 10. இனிவை கூறல்

இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்
துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய
இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

சோமேசர் முதுமொழி வெண்பா > இனிவை கூறல் > பாடல்: 10

11 11. செய்நன்றி அறிதல்

பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்
கொள்வர் பயன்தெரி வார்.

சோமேசர் முதுமொழி வெண்பா > செய்நன்றி அறிதல் > பாடல்: 11

12 12. நடுவு நிலைமை

வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்
சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

சோமேசர் முதுமொழி வெண்பா > நடுவு நிலைமை > பாடல்: 12

13 13. அடக்கமுடைமை

எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்
சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்
யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்
சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

சோமேசர் முதுமொழி வெண்பா > அடக்கமுடைமை > பாடல்: 13

14 14. ஓழுக்கமுடைமை

தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்
துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்
ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஓழுக்கமுடைமை > பாடல்: 14

15 15. பிறனில் விழையாமை

ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்
தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற
பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பிறனில் விழையாமை > பாடல்: 15

16 16. பொறையுடைமை

ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்
சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட
ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு
பொன்றுந் துணையும் புகழ்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பொறையுடைமை > பாடல்: 16

17 17. அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்
துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

சோமேசர் முதுமொழி வெண்பா > அழுக்காறாமை > பாடல்: 17

18 18. வெஃகாமை

நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை
துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்
நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமு மாங்கே தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வெஃகாமை > பாடல்: 18

19 19. புறங்கூறாமை

கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே
தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தோறா தவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > புறங்கூறாமை > பாடல்: 19

20 20. பயனில சொல்லாமை

சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே
துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்
பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பயனில சொல்லாமை > பாடல்: 20

21 21. தீவினையச்சம்

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்
சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > தீவினையச்சம் > பாடல்: 21

22 22. ஒப்புரவறிதல்

பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்
தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை
செய்யா தமைகலா வாறு.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஒப்புரவறிதல் > பாடல்: 22

23 23. ஈகை

மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்
தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஈகை > பாடல்: 23

24 24. புகழ்

போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்
தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்
ஈத லிசைபட வாழ்த லதுவல்லது
ஊதிய மில்லை யுயிர்க்கு.

சோமேசர் முதுமொழி வெண்பா > புகழ் > பாடல்: 24

>

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

சோமேசர் முதுமொழி வெண்பா > தவம் > பாடல்: 27

முதுமொழி வெண்பா > பெரியோரைத் துணைகோடல் > பாடல்: 45

சகமிறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51

d>4. நாடு

மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > நாடு > பாடல்: 74

d>77. படைமாட்சி

நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > படைமாட்சி > பாடல்: 77

6 பகைமாட்சி

ஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்
தூநறும்பூ வாளியான் சோமேசா - மான
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார் மென்மேக பகை.

சோமேசர் முதுமொழி வெண்பா > பகைமாட்சி > பாடல்: 87

பாடல் எண் பாடல் Verse
25 25. அருளுடைமை

மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்
சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த
பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்
அற்றார்மற் றாத லரிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > அருளுடைமை > பாடல்: 25

0
26 26. புலால் மறுத்தல்

மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்
துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமே
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

சோமேசர் முதுமொழி வெண்பா > புலால் மறுத்தல் > பாடல்: 26

1
27
27. தவம்

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

சோமேசர் முதுமொழி வெண்பா > தவம் > பாடல்: 27

2 அன்பர் பிறப்பை அகற்றுமலை அன்பரல்லா
வன்பர் பிறப்பை வளர்க்குமலை - அன்பை
வடிக்குமலை சிங்கத்தை வந்துசிம்புள் ஆகி
அடிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 2

28 28. கூடாவொழுக்கம்

மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்தி
தூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > கூடாவொழுக்கம் > பாடல்: 28

3 கூற்றை உதைத்தமலை கோமாறன் கூடல்வைகை
ஆற்றை அடைத்தமலை ஆரூரன் - போற்றச்
சிறந்தமலை தீவினையேன் செய்தகுறை எல்லாம்
மறந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 3

4 ஏழைக்கு இரங்குமலை ஏதேது கேட்டாலும்
கோழைப் படாமல் கொடுக்குமலை - வேழம்
உரித்தமலை அம்மைக்கு ஒருபாகம் ஈந்த
மருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 4

29
29. கள்ளாமை

நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.

சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளாமை > பாடல்: 29

5 கண்டம் கரியமலை கண்மூன்று உடையமலை
அண்டரெல்லாம் போற்றற்கு அரியமலை - தொண்டருக்குத்
தோற்றுமலை நாளும் தொழுவோர் ஏழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 5

30 30. வாய்மை

பிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்பு
துள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வாய்மை > பாடல்: 30

6 அன்னமுடன் சொன்னம் அளிக்குமலை ஆதரிப்போர்
உன்னுவரம் எல்லாம் உதவுமலை - துன்னுபுகழ்
கொண்டமலை அங்கிக் கொழுந்தாகி அண்டமுற
மண்டுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 6

7 மாமா தவநமச்சி வாயன் தினமொருவெண்
பாமாலை சாத்திப் பணியுமலை - காமாதி
என்னுமலை தான்கடந்தோர் இன்பத் திருஉளத்தே
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 7

31 31. வெகுளாமை

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்ல
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > வெகுளாமை > பாடல்: 31

8 அஞ்சுஅக் கரமாய் அமர்ந்தமலை ஆதரிப்போர்
வஞ்சக் கருவினையை மாற்றுமலை - நெஞ்சைத்
திருத்துமலை மெய்ஞ்ஞான சித்திதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 8

32
9 32. இன்னா செய்யாமை

பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்
துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்
பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > இன்னா செய்யாமை > பாடல்: 32

தொண்டர் வலமாகச் சூழுமலை சூழுமவர்
பண்டைவினை எல்லாம் பறிக்குமலை - அண்டம்
உருவுமலை எந்தைகுரு ஓம்நமச்சி வாயன்
மருவுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 9

10 கொம்பனைய பேதைக் குறமகளிர் வானிலுறும்
அம்புலியி னோடுவிளை யாடுமலை - செம்பவளம்
ஒத்தமலை சற்குருவாய் ஒண்கழலென் சென்னியின்மேல்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 10

33
11
ஞானகுரு நாதன் நமச்சிவா யன்கருணை
ஆனபரன் ஆகிஎனை ஆண்டமலை - வானவர்கள்
போற்றுமலை தீவினையேன் புந்திக்க வலைஎல்லாம். (புந்திக் கவலைஎல்லாம்)
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 11

12 சரண கமலம் தனைப்புகழும் தொண்டர்
மரண பவத்துயரம் மாறக் - கருணை
பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே
வழியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12

34 34. நிலையாமை.

ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்
தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

சோமேசர் முதுமொழி வெண்பா > நிலையாமை > பாடல்: 34

அன்பர் கருத்தில் அனவரதம் மேவுமலை
துன்பம் அகலத் துரத்துமலை - இன்பம்
விளைக்குமலை செம்பொன்மக மேருவினை வில்லா
வளைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 13

14 நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார்
அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட
வளர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14

35 35. துறவு

கோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்
தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > துறவு > பாடல்: 35

15 சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள்
மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15

16 36 வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16

வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16

17 முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால்
அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு
துன்னுமலை தன்னைத் துதிக்குமடி யாருளத்தில்
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 17

37
18 வண்தமிழா லேநமச்சி வாயகுரு ஏத்துமலை
கண்டுதொழு வார்க்கினிய காட்சிமலை - அண்டமுதல்
நீழுமலை போற்றி நினைக்குமடி யாருளத்தே
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 18

19
38 38. ஊழ்

முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஊழ் > பாடல்: 38

38. ஊழ்

முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்
துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஊழ் > பாடல்: 38

20 மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால்
பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும்
மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ்
வைக்குமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20

39 39. இறைமாட்சி.

பார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்
சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு.

சோமேசர் முதுமொழி வெண்பா > இறைமாட்சி > பாடல்: 39

21 எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச
பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத்
தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே
வாய்த்தமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21

40 40. கல்வி

சம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப
தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > கல்வி > பாடல்: 40

22 அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு
மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச்
சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22

41 41. கல்லாமை

மெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்
துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > கல்லாமை > பாடல்: 41

23
நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23

24 ஓலமிடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில்
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 24

42 42. கேள்வி

ஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரே
தூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தி னூற்றாந் துணை.

சோமேசர் முதுமொழி வெண்பா > கேள்வி > பாடல்: 42

25 ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்
சோதிச் செழுஞ்சுடராய்த் தோன்றுமலை - வேதம்
முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி
வழங்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 25

26 வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன்
சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை
நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம்
மாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26

43 43. அறிவுடைமை

அன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்
துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்
அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவது
அஞ்ச லறிவார் தொழில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அறிவுடைமை > பாடல்: 43

27 சத்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து நின்றமலை
முத்திக்கு வித்தாய் முளைத்தமலை - எத்திசையும்
போற்றுமலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 27

28 வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 28

44 44. குற்றங்கடிதல்

ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்
சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்
வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > குற்றங்கடிதல் > பாடல்: 44

29 சிட்டர் இடரும் சிவநீதி இல்லாத
துட்டர் சுகமும் துடைக்குமலை - நட்டம்
பயிலுமலை எவ்வுலகும் பாழ்படுமென்று ஆலம்
அயிலுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 29

45
30 கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30

31 துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசுந்தேன் இருக்குமலை - அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 31

46 46. சிற்றினஞ் சேராமை

அற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்
சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > சிற்றினஞ் சேராமை > பாடல்: 46

32 செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32

33 கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 33

47 47. தெரிந்து செயல்வகை.

சானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனே
தூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

சோமேசர் முதுமொழி வெண்பா > தெரிந்து செயல்வகை > பாடல்: 47

34 பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த
வெற்றி மதராசன் வேகவே - உற்று
விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள்
அழித்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 34

35 பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை
வீடு தனக்கிருகால் மேவியே - கூட
இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும்
மணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 35

48
36 48. வலியறிதல்

சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்
துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்
உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வலியறிதல் > பாடல்: 48

37 உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம்
பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு
அரியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37

49 49. காலமறிதல்

வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொரு
தூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றே
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > காலமறிதல் > பாடல்: 49

38 வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல்
நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட
கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான
அருணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 38

39 வீடு முதலா விரும்பும் பொருளனைத்தும்
பாடுமடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ்
பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை
ஆண்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 39

50. இடனறிதல்

காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்
தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > இடனறிதல் > பாடல்: 50

40 அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 40

51
41 51. தெரிந்து தௌிதல்

தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்
சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்
தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

சோமேசர்
42 பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42

52
43 உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு
வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம்
தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண்
ஆக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43

44 உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை
கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர்
துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்
மதிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44

53
45 53. சுற்றந்தழால்

ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்
சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரே
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > சுற்றந்தழால் > பாடல்: 53

நாதனரு ளான நமச்சிவா யன்கனிவாய்
ஓதுதமிழ் மாலை உகந்தமலை - பாதிமதி
சூடுமலை பத்திசெயும் தொண்டருடன் கூடிவிளை
யாடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 45

46 தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு
மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும்
பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை
அற்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46

54 54. பொச்சாவாமை

முப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரே
துப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > பொச்சாவாமை > பாடல்: 54

47 நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப்
பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள்
வீழுமலை பற்றொழிந்த மெய்யடியார் நெஞ்சகத்தில்
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 47

55
48 நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர்
தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48

நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர்
தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48

49 நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக்
கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின்
நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த
வாமமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49

56 56. கொடுங்கோன்மை

ஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்
துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

சோமேசர் முதுமொழி வெண்பா > கொடுங்கோன்மை > பாடல்: 56

50 புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய
நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றுமொரு
நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய்
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 50

51
57
57. வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்
தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வெருவந்த செய்யாமை > பாடல்: 57

52 தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேரொளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தரகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 52

58
58. கண்ணேட்டம்

மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்
தோலா விடமுண்டாய் சோமேசா - சால
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

சோமேசர் முதுமொழி வெண்பா > கண்ணேட்டம் > பாடல்: 58

53 மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாயென்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 53

54 தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 54

59 59. ஓற்றாடல்

வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்
சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்
எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஓற்றாடல் > பாடல்: 59

55
புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 55

56 துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 56

60 60. ஊக்கமுடைமை

வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஊக்கமுடைமை > பாடல்: 60

57 வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேரா னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவிலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 57

58 நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58

61 61. மடியின்மை

பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி
தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

சோமேசர் முதுமொழி வெண்பா > மடியின்மை > பாடல்: 61

59 தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரையிலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றருளும்
மாகமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 59

60 62 கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதிருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 60

கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதிருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 60

61 முக்குணமும் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்குமுணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 61

63 63. இடுக்கண்ணழியாமை

என்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்
துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்ற
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > இடுக்கண்ணழியாமை > பாடல்: 63

62
பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62

63 அண்டமுழு தும்பறந்தே அன்னஉரு வாய்த்தேடி
மண்டலமெ லாம்கோல மாய்த்தேடிப் - புண்டரிகன்
சீர்க்கமல கோனறியாத் தெய்வச் சிவஞான
மார்க்கமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 63

64 64. அமைச்சு

கால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்
தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லதமைச்சு.

சோமேசர் முதுமொழி வெண்பா > அமைச்சு > பாடல்: 64

64 கூனல் சிறுபிறையைக் கோளரவுக்கு அஞ்சாமல்
வான்அப்பு அணிசடைமேல் வைத்தமலை - ஞானச்
சரதமலை ஆனந்தத் தாண்டவத்துக்கு ஏற்ற
வரதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 64

65
65 65. சொல்வன்மை

நித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்
துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்
ஆக்கமும் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு.

சோமேசர் முதுமொழி வெண்பா > சொல்வன்மை > பாடல்: 65

66 ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 66

66
67 அஞ்சு புலனும் அடக்கி அறிவுடையோர்
வஞ்ச வினைபிறவி மாயவே - நெஞ்சில்
அழுத்துமலை அன்பர் அனவரதம் போற்றி
வழுத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 67

68 கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 68

67 67. வினைத்திட்பம்

செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்
துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறு
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி யன்னாருடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்திட்பம் > பாடல்: 67

69 இமயவரும் பத்தரும்மா கேசுரரும் கானச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்கரிய
வானமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 69

70 ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்தெழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்கவரைப் பொற்கொடியோ டெய்தி
மகிழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 70

68 68. வினைச்செயல்வகை

வெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்
துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ள
முடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வினைச்செயல்வகை > பாடல்: 68

71 மாலூன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
காலூன்றி ஆனக் கருணையாய்க் - கோலூண்றித்
தந்த விருத்த சதுர்வே தியனாக
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 71

69 72 அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல்
மறுகு தனிலடியார் வாழ - விறகு
சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும்
அமர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72

அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல்
மறுகு தனிலடியார் வாழ - விறகு
சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும்
அமர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72

73 மட்டுஉலவு கஞ்ச மலரோனும் மாயோனும்
திட்டமுடன் தேடித் திகைத்தாலும் - எட்டரிய
ஞானமலை பார்மீது நால்உகத்தில் நாலுவடிவு
ஆனமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 73

74 மறைவடிவாம் சோமாசி மாறன்மகம் தன்னில்
உறைவடிவாம் பங்கிலுமை யோடு - நிறைவடிவாய்ச்
சென்றமலை அந்தணர்சூழ் தெய்வக் கனகமணி
மன்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 74

70 70. மன்னரைச்சேர்ந்தொழுகல்

மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > மன்னரைச்சேர்ந்தொழுகல் > பாடல்: 70

75 எப்பொருளும் ஆகி இருசுடர் பாராக
மெய்ப்பொருளும் ஆகி விளங்குமல - கைப்பொருளை
ஒத்தமலை எந்தலைமெல் ஓம்நம்ச்சி வாயனடி
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 75

71
71. குறிப்பறிதல்

அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்
துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்
ஐயப் படாஅ தகத்த துணர்வானை
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 71

பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த
வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும்
பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76

77 வானை உருவ வளர்ந்தமலை வாம்பச்சைத்
தேனைஒரு பாகத்தில் சேர்த்தமலை - யானை
அணித்திரள்சேர் சாரல் அதில்வேய்கள் ஈன்ற
மணித்திரள்சேர் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 77

72
78
அன்று கயிலை அரக்கன் எடுத்தஅப்போ
நின்றுஅவனைக் காலால் நெரித்தமலை - என்றும்
அருந்துமலை எவ்வுலகும் அன்பரிடர் நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 78

79 அன்றுபதி னாறுவயது ஆனமார்க் கண்டர்தமக்கு
என்றும்ஈர் எண்வயதே என்றமலை - நின்று
சிறக்குமலை தன்னடியார் செய்தகுறை எல்லாம்
மறக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 79

73
80 அன்றிருவர் தேட அனல்வடிவாய் நின்றமலை
நின்றுருகும் தொண்டருக்கு நேயமலை - என்றும்
நடிக்குமலை வேள்வியிலே நாரணனை ஓட
அடிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 80

73. அவையஞ்சாமை

வாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்
சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகல
ஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

சோமேசர் முதுமொழி வெண்பா > அவையஞ்சாமை > பாடல்: 73

81
74 74. நாடு

மேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசை
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > நாடு > பாடல்: 74

82 பைஅரவம் சூடுமலை பத்தர்பணிந் தேத்துமலை
கையில்மழு மாந்தரித்த காட்சிமலை - துய்ய
நதிஅணியும் வேணியின்மேல் நாறுமலர்க் கொன்றை (நறுமலர்க் கொன்றை ??)
மதிஅணியும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 82

75 75. அரண்

வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அரண் > பாடல்: 75

83 மயிலரவம் சேருமலை மான்புலிகள் கூடிப்
பயிலுமலை வானோர் பரவும் - கயிலை
பொருந்துமலை எந்நாளும் போற்றுமன்பர் நாவால்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 83

84 உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப்
பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே
நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84

76 76. பொருள் செயல்வகை

உக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்
றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்த
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

சோமேசர் முதுமொழி வெண்பா > பொருள் செயல்வகை > பாடல்: 76

85 உள்ளும் புறமும் ஒருசெயலாம் அன்பருளம்
கொள்ளுமலை நாட்டம் குளிக்குமலை - துள்ளும்
எருத்தின்மேல் ஏறுமலை என்பிறவி நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 85

86
77 77. படைமாட்சி

நீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததே
தூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > படைமாட்சி > பாடல்: 77

87 போதமுற்ற மெய்யடியார் புந்தியிலே வேஓடிப்
பாதமுச்சி மட்டாய்ப் படர்ந்தமலை - நாதம்
தழைக்குமலை அன்பர் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 87

78 78. படைசெருக்கு

மன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்
துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > படைசெருக்கு > பாடல்: 78

88 முப்போதும் பூசித்து மோகித்துப் போற்றுமவர்க்கு (போற்றுமவர்க்)
அப்போது முன்நின்று அருளுமலை - எப்போதும் (கப்போது)
தாய்க்குமினி தானமலை சற்குருவாய் நாயேற்கு
வாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 88

89 காலை உதைத்தமலை கையில்மான் சூலமலை
வேலை விடமருந்தும் வெற்றிமலை - மாலை
அணிசேரும் நீள்முடிமேல் அங்கரவம் ஈன்ற
மணிசேரும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 89

79 79. நட்பு

வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.

சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பு > பாடல்: 79

90 மாறுபட்ட தக்கனுயிர் மாய்த்தமலை மாலயற்கு
நீறுபட்ட செந்தழலாய் நின்றமலை - கூறுங்கால்
ஒப்பனைகள் இல்லாது உயர்ந்தமலை நீள்முடிமேல்
அப்பணியும் அண்ணா மலை (அப்புஅணியும்)

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 90

91
80 80. நட்பாராய்தல்

போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்
தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதே
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பாராய்தல் > பாடல்: 80

81 81. பழைமை

இல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்
தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாது
அழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பழைமை > பாடல்: 81

92 மானொருகை வெற்றி மழுஒருகை ஆனமலை
ஞானமுனி வோர்கள்நித்தம் நாடுமலை - யானை
உரித்தமலை அம்மை உமைபாலே யார்க்கும்
அருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 92

93 முல்லைமலர் கொன்றை முடிமேல் அணிந்தமலை
எல்லைஇல்லா மாதவர்கள் ஏத்துமலை - தில்லையிலே
நட்டமலை முப்புரத்தை நாடுமன்பர் மூவரைவிட்டு
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 93

82 82. தீநட்பு

ஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்
தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்
ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > தீநட்பு > பாடல்: 82

94 எல்லாரும் காணற்கு இனியமலை என்னுடைய
பொல்லா வினைஅறுக்கப் போந்தமலை - சொல்லாரும்
நல்லமலை பொல்லாரை நாசமுறப் பார்க்கைக்கு
வல்லமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 94

95 ஆழி நெடுமால் அயற்குமரி தானமலை
ஊழின்வினை அன்பர்க்கு ஒழிக்குமலை - ஆழியிலே
நஞ்சழலைக் கண்டு நடுங்கினரைக் காக்குமலை
அஞ்சுமுகத்து அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 95

83 83. கூடாநட்பு.

தாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்
தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > கூடாநட்பு > பாடல்: 83

96 எத்திசையும் தோற்றுமலை ஏறுகந்து நின்றமலை
சித்திவரம் ஈந்தருளிச் செய்தமலை - முத்தர்மனம்
பூணுமலை அண்டர் புகழுமலை நீண்டதொரு
மாணுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 96

97 வண்மைக் குணத்தவரை மாதவரை வந்தடைந்தோர்
தம்மைத் தளராமல் தாங்குமலை - உண்மை
பொருந்துமலை விண்ணவர்கள் போகாமல் ஆலம்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 97

84 84. பேதைமை

வன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்
துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பேதைமை > பாடல்: 84

98 வானத்துப் பூந்தருவை வாங்கிக் களிறுபிடி
யானைக்கு நீட்டி அணையுமலை - ஞானத்தர்
உன்னுமலை எந்நாளும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 98

85 85. புல்லறிவாண்மை

இல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்
தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்
ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

சோமேசர் முதுமொழி வெண்பா > புல்லறிவாண்மை > பாடல்: 85

99 அழியாத முத்தி அளிக்குமலை அன்பர்க்கு
ஒழியா வினையை ஒழித்துக் - கழியாத
ஏற்றுப் பிறப்பை இனிஅமையும் என்றருளி
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 99

100 பெற்றம் தனில்தோன்றிப் பெய்வளையும் தானுமென்தன்
குற்றம் களைந்தருளிக் கொண்டமலை - நித்தம்
புதியமலை கங்கைஅணி பொற்சடைமேல் வைத்த
மதியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 100

பெற்றம் தனில்தோன்றிப் பெய்வளையும் தானுமென்தன்
குற்றம் களைந்தருளிக் கொண்டமலை - நித்தம்
புதியமலை கங்கைஅணி பொற்சடைமேல் வைத்த
மதியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 100

101 அண்ணா மலைமாலை ஆனதமிழ் வெண்பாவால்
தண்ஆரும் ஐந்தெழுத்தைச் சாற்றியநூல் - பண்ணாகக்
கற்றவர்கள் கேட்டவர்கள் காசினியில் பேரின்பம்
உற்றுலகை ஆள்வார் உவந்து

அண்ணாமலை வெண்பா > நூல் பயன் > பாடல்: 101

87 102
மன்னுதிரு அண்ணா மலையைவலம் ஆகவந்துன்
உன்னுதிரு ஐந்தெழுத்தை ஓதினேன் - தென்னருணை
நாயகத்தைக் கோவிலிலே நான்கண்டேன் பெற்றெடுத்த
தாயகத்தைக் கண்டவர்பொன் தாள்

அண்ணாமலை வெண்பா > நூல் பாடிய முறை > பாடல்: 102

மொத்த பாடல்கள்: 102

முன்   முகப்பு


88 88. பகைதிறந்தௌிதல்

நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்
சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.

சோமேசர் முதுமொழி வெண்பா > பகைதிறந்தௌிதல் > பாடல்: 88

89 89. உட்பகை

மாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்
தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலா
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு.

சோமேசர் முதுமொழி வெண்பா > உட்பகை > பாடல்: 89

90 90. பெரியாரைப்பிழையாமை

கொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்
துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்
ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெரியாரைப்பிழையாமை > பாடல்: 90

91 91. பெண்வழிச்சேரல்

கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்
சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணி
இல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெண்வழிச்சேரல் > பாடல்: 91

92 92. வரைவின் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனே
தூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > வரைவின் மகளிர் > பாடல்: 92

93 93. கள்ளுண்ணாமை

தக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்
தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளுண்ணாமை > பாடல்: 93

94 94. சூது

முற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடு
சொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.

சோமேசர் முதுமொழி வெண்பா > சூது > பாடல்: 94

95 95. மருந்து

நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்
சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய
நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > மருந்து > பாடல்: 95

96 96. குடிமை

மங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்
துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்
வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைபிரித லின்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > குடிமை > பாடல்: 96

97 97. மானம்

அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்
துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > மானம் > பாடல்: 97

98 98. பெருமை

தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்
தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்
சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.

சோமேசர் முதுமொழி வெண்பா > பெருமை > பாடல்: 98

99 99. சான்றாண்மை

வன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்
தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

சோமேசர் முதுமொழி வெண்பா > சான்றாண்மை > பாடல்: 99

100 100. பண்புடைமை

உன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்
துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > பண்புடைமை > பாடல்: 100

101 101. நன்றியில் செல்வம்

எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்
சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதே
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > நன்றியில் செல்வம் > பாடல்: 101

102 102. நாணுடைமை.

புண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்
துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்
நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுடைமை > பாடல்: 102

103 103. குடிச்செயல்வகை

மற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததே
சுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி.

சோமேசர் முதுமொழி வெண்பா > குடிச்செயல்வகை > பாடல்: 103

104 104. உழவு

வேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்
சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை.

சோமேசர் முதுமொழி வெண்பா > உழவு > பாடல்: 104

105 105. நல்குரவு

நற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்
சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்
நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நல்குரவு > பாடல்: 105

106 106. இரவு

கஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்
துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > இரவு > பாடல்: 106

107 107. இரவச்சம்

எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > இரவச்சம் > பாடல்: 107

108 108. கயமை

ஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்
தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லாத வர்க்கு.

சோமேசர் முதுமொழி வெண்பா > கயமை > பாடல்: 108

109 109. தகையணங்குறுத்தல்

வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்
தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்
உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > தகையணங்குறுத்தல் > பாடல்: 109

110 110. குறிப்பறிதல்

காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்
தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்
உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப்படும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிதல் > பாடல்: 110

111 111. புணர்ச்சி மகிழ்தல்

மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்
சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணானுலகு.

சோமேசர் முதுமொழி வெண்பா > புணர்ச்சி மகிழ்தல் > பாடல்: 111

112 112. நலம்புனைந்துரைத்தல்

ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்
தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.

சோமேசர் முதுமொழி வெண்பா > நலம்புனைந்துரைத்தல் > பாடல்: 112

113 113. காதற்சிறப்புரைத்தல்

கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்
தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்
வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > காதற்சிறப்புரைத்தல் > பாடல்: 113

114 114. நாணுத்துறவுரைத்தல்

காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்
சோமநுதற் பரவை சோமேசா - ஆமே
கடலென்ன காமமுழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நாணுத்துறவுரைத்தல் > பாடல்: 114

115 115. அலரறிவுறுத்தல்

ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறை
சோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்
கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > அலரறிவுறுத்தல் > பாடல்: 115

116 116. பிரிவாற்றாமை

வாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்
சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்கு
இன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்
இன்னா தினியார்ப் பிரிவு.

சோமேசர் முதுமொழி வெண்பா > பிரிவாற்றாமை > பாடல்: 116

117 117. படர்மெலிந்திரங்கல்

இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்கு
துன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்கு
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > படர்மெலிந்திரங்கல் > பாடல்: 117

118 118. கண்விதுப்பழிதல்

தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்
சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்
கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > கண்விதுப்பழிதல் > பாடல்: 118

119 119. பசப்புறு பருவல்

கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்
சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை துற்றா ரெனின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பசப்புறு பருவல் > பாடல்: 119

120 120. தனிப்படர்மிகுதி

பன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்
துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதே
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

சோமேசர் முதுமொழி வெண்பா > தனிப்படர்மிகுதி > பாடல்: 120

121 121. நினைத்தவர் புலம்பல்

தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்
துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதே
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நினைத்தவர் புலம்பல் > பாடல்: 121

122 122. கனவுநிலையுரைத்தல்

அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்
சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ யினிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > கனவுநிலையுரைத்தல் > பாடல்: 122

123 123. பொழுதுகண்டிரங்கல்

வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதே
தூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதே
காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

சோமேசர் முதுமொழி வெண்பா > பொழுதுகண்டிரங்கல் > பாடல்: 123

124 124. உறுப்பு நலனழிதல்

ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்
சூதரா வான்மீகி சோமேசா - கோதில்
பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

சோமேசர் முதுமொழி வெண்பா > உறுப்பு நலனழிதல் > பாடல்: 124

125 125. நெஞ்சொடுகிளத்தல்

அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்
துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பே
இருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்க ணில்.

சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுகிளத்தல் > பாடல்: 125

126 126. நிறையழிதல்

கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்
தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

சோமேசர் முதுமொழி வெண்பா > நிறையழிதல் > பாடல்: 126

127 127. அவர்வயின் விதும்பல்

சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்
சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அவர்வயின் விதும்பல் > பாடல்: 127

128 128. குறிப்பறிவுறுத்தல்

சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்
துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > குறிப்பறிவுறுத்தல் > பாடல்: 128

129 129. புணர்ச்சிவிதும்பல்

யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்
தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

சோமேசர் முதுமொழி வெண்பா > புணர்ச்சிவிதும்பல் > பாடல்: 129

130 130. நெஞ்சொடுபுலத்தல்

விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்
தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சே
நீயெமக் காகா தது.

சோமேசர் முதுமொழி வெண்பா > நெஞ்சொடுபுலத்தல் > பாடல்: 130

131 131. புலவி

கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்
றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டா
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.

சோமேசர் முதுமொழி வெண்பா > புலவி > பாடல்: 131

132 132. புலவிநுணுக்கம்

சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளே
தூவாய்குணமாலை சோமேசா - ஆவகையே
தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீர ராகுதி ரென்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > புலவிநுணுக்கம் > பாடல்: 132

133 133. ஊடலுவகை

காயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்
தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்
ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்
கூடலிற் காணப் படும்.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஊடலுவகை > பாடல்: 133

மொத்த பாடல்கள்: 102

முன்   முகப்பு