திருமந்திரம் | Thirumanthiram

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் 
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1

திருமந்திரம் > முதல் தந்திரம் > 11 அக்கினி காரியம் > பாடல்: 214

Riches from obloquy free, the spreading sky and earth,
The directions all, and the godly hosts who there hold sway,
All flourish in Victory's wake when Brahmins true,
With Vedas commencing, pursue the sacrificial way.

சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026