இருபாஃ இருபது | Irubaa Irubathu |
எண்திசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
மேதினி உதய மெய்கண்ட தேவ!
கோதுஇல் அமுத! குணப்பெரும் குன்ற!
என்னின் ஆர்தலும் அகறலும் என்னைகொல்
உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
என்னும் அதுவே நின் இயல்பு எனினே
வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
உண்டு எனப்படுபவை எண்தாள் முக்கண்
யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின்
யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
இன்றிச் சாயைக்கு நன்றுமன் இயல்பே
அனையை ஆகுவை நினைவு அரும் காலை
இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நியேல்
அருள்மாறு ஆகும், பெரும! அ•து அன்றியும்
நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
சொற்பெறும் அ•து இத் தொலுலகு இல்லை
அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வுஅறச்
சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!
இருபாஃ இருபது > பாடல்: 12
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக