இருபாஃ இருபது | Irubaa Irubathu

அற்றதுஎன் பாசம் உற்றது உன் கழலே 
அருள்துறை உறையும் பொருள்சுவை நாத! 
வேறு என்று இருந்த என்னை யான் பெற 
வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ! 
இருவினை என்பது என்னைகொல் அருளிய 
மனமே காயம் வாக்கு எனும் மூன்றின் 
இதமே அகிதம் எனும் இவை ஆயில் 
கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா 
காரணம் சடம் அதன் காரியம் அ•தால் 
ஆரணங்கு ஆம் வழி அடியேற்கு என்னைகொல் 
செயல் எனது ஆயினும் செயலே வாராது 
இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும் 
பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச் 
செய்திக்கு உள்ள செயல் அவை அருத்தின் 
மையல்தீர் இயமற்கு வழக்கு இல்லை, மன்ன! 
ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு 
இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை 
நின்னது கருணை சொல் அளவு இன்றே 
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம் 
உள்ளது போகாது இல்லது வாராது 
உள்ளதே உள்ளது எனுமுரை அதனால் 
கொள்ளும் வகையால் கொளுத்திடும் ஆயின் 
வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும் 
ஈய வேண்டும் எனும்விதி இன்றாம் 
ஆயினும் என்னை அருந்துயர்ப் படுத்தல் 
நாயி னேற்கு நன்றுமன் மாயக் 
கருமமும் கரும பந்தமும் 
தெருள அருளும் சிவபெரு மானே! 

இருபாஃ இருபது > பாடல்: 14

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026