இருபாஃ இருபது | Irubaa Irubathu

தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு 
பேராது அருளுதல் பெரியோர் கடனே 
நின்னைக் கலப்பது என் உண்மை எனில் 
நினது நேர்மை சொல்மனத்து இன்றே 
எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும் 
பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி 
நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி 
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் 
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க 
வாக்கும் மனமும் போக்கு உள தனுவும் 
சொல்லும் நினைவும் செய்யும் செயலும் 
நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து 
முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க் 
காலமும் தேசமும் மால் அற வகுத்து 
நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே 
சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே 
சாலார் செயலே மால் ஆகுவதே 
அத்துவா மெத்தி அடங்கா வினைகளும் 
சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை 
நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும் 
ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால் 
கருமம் அருத்தும் கடன் அது இன்றாம் 
தருமம் புரத்தல் பெருமையது அன்றே 
கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த! 
வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ! 
இடர்படு குரம்பையில் இருத்தித் 
துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே

இருபாஃ இருபது > பாடல்: 16

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026