திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிரின் பக்குவ காலத்தில் ஆணவம் நீங்குவதாகும்

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒன்றும் மிகினும் ஒளி கவராதேல் உள்ளம்
என்றும் அகலாது இருள்.
ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள
மென்று மகலா திருள்.
பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 29

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026