திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam |
புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம்
புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை
அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார
நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி
மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு
வேதியனே கேள் என்று விளம்புவான்
மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர்
செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான்
திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 9
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக