இருபாஃ இருபது | Irubaa Irubathu

கோலம் கொண்ட ஆறு உணராதே 
ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப் 
பொய்யை மெய்யனப் புகன்று வையத்து 
ஓடாப் பூட்கை நாடி நாடா 
என்னுள் கரந்து என் பின் வந்து அருளி 
என்னையும் தன்னையும் அறிவின்றி இயற்றி 
என்னது யான் எனும் அகந்தையும் கண்டு 
யாவயின் யாவையும் யாங்கணும் சென்று 
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து 
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு 
என்பணி ஆளாய் எனைப் பிரியாதே 
ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு 
என்வழி நின்றனன் எந்தை அன்னோ 
அருள்மிக உடைமையின் அருள்துறை வந்து 
பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும் 
கைகண்டு கொள்ளெனக் கடல் உலகு அறிய 
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத் 
தன்னுள் கரந்து தான்முன் ஆகித் 
தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித் 
தன்னையும் என்னையும் தந்து தனது 
செய்யாமையும் என்செயல் இன்மையும் 
எம்மான் காட்டி எய்தல் 
அம்ம எனக்கே அதிசயம் தருமே

இருபாஃ இருபது > பாடல்: 18

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026