இருபாஃ இருபது | Irubaa Irubathu

உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும் 
அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன் 
அந்தம் ஆதி இல்லவன் வந்து 
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் 
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு 
இருள்வெளி ஆகும் மருளினை அறுத்து 
வந்து புகுதலும் சென்று நீங்கலும் 
இன்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் 
ஒன்று ஆகாமல் இரண்டா காமல் 
ஒன்றும் இரண்டும் இன்றா காமல் 
தன்னது பெருமை தாக்கான் ஆயினும் 
என்னது பெருமை எல்லாம் எய்தித் 
தன்னை எனக்குத் தருவதை அன்றியும் 
என்னையும் எனக்கே தந்து தன்னது 
பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள் 
ஆரா இன்பம் அளித்துத் தீரா 
உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற 
வள்ளனமை காட்டி மலர் அடி அருளிய 
மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை 
வெண்ணெய் காவலன் மெய்கண்டதேவன் 
அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய 
மலம் முதலாயின மாய்க்கும் 
உலக உயிர்க் எல்லாம் ஒரு கண்ணே

இருபாஃ இருபது > பாடல்: 20

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026