திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும் சத்தி பின்னம் இலான் எங்கள் பிரான். | தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி பின்னமிலா னெங்கள் பிரான். |
| பொருள் : ஒருவனாகிய எம் இறைவன் பிறப்பு இறப்பிற் படாமல் என்றும் ஒரு தன்மையனாய் உள்ளவன். அந்த நிலைமையைப் பலவாகிய உயிர்களும் பெறும்படியாகச் செய்யும் தனது சத்தியோடு அவன் வேறின்றி நிற்கிறான். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows