திருவருட்பயன் | Thiruvarutpayan

ஆணவம் உயிரின் குணம் அன்று

பதம் பிரித்துஉள்ளபடியே
இருள் இன்றேல் துன்பு என் உயிர் இயல் பேற் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகப் போம்.
இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும்
பொருளுண்டே லொன்றாகப் போம்.
பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும்.

திருவருட்பயன் > மூன்றாம் அதிகாரம் > 3. இருள்மல நிலை > பாடல்: 27

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026