திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| இருள் இன்றேல் துன்பு என் உயிர் இயல் பேற் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். | இருளின்றேல் துன்பென் னுயிரியல்பேற் போக்கும் பொருளுண்டே லொன்றாகப் போம். |
| பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows