திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு அறிவு என்ற பேர் நன்று அற. | பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக் கறிவென்ற பேர்நன் றற. |
| பொருள் : ஐம்பொறிகளின் துணையின்றி ஒன்றையும் அறியமாட்டாத உயிருக்குப் போய் சித்து என்று பெயர் வைத்திருக்கிறார்களே. அந்தப் பெயர் மிக நன்றாய் இருக்கிறது! என்று இகழ்ச்சிக் குறிப்போடு கூறுகிறார் ஆசிரியர். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows