திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்துமோ?

பதம் பிரித்துஉள்ளபடியே
பொறி இன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு
அறிவு என்ற பேர் நன்று அற.
பொறியின்றி யொன்றும் புணராதே புந்திக்
கறிவென்ற பேர்நன் றற.
பொருள் : ஐம்பொறிகளின் துணையின்றி ஒன்றையும் அறியமாட்டாத உயிருக்குப் போய் சித்து என்று பெயர் வைத்திருக்கிறார்களே. அந்தப் பெயர் மிக நன்றாய் இருக்கிறது! என்று இகழ்ச்சிக் குறிப்போடு கூறுகிறார் ஆசிரியர்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 15

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026