திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிர் அறியுந்தன்மை உடையதே

பதம் பிரித்துஉள்ளபடியே
ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல் எனில் என் செய.
ஒளியு மிருளு முலகு மலர்கட்
டெளிவி லெனிலென் செய.
பொருள் : விழித்திருக்கின்ற கண்ணிடத்தில் காணும் தன்மை இல்லையாயின், ஒளியும், இருளும் உலகும் ஆகிய மூன்றும் இருந்தும் அக்கண்ணிற்கு என்ன பயன்? அவை யாதொரு பயனையும் செய்யா.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 16

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026