திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிர் சதசத்தாய் நிற்பது

பதம் பிரித்துஉள்ளபடியே
சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்.
சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை
யுய்த்தல்சத சத்தா முயிர்.
பொருள் : சத்தாகிய முதற்பொருள் அசத்தாகிய உலகத்தை அறிந்து அனுபவியாது. அசத்தாகிய உலகம் அறிவற்ற சடம் ஆதலின் அது சத்தாகிய முதற்பொருளை அறியாது. இந்நிலைமையில் இவ்விரண்டினிடத்தும் தனது அறிவைச் செலுத்தி அனுபவிப்பது உயிரேயாகும். அவ்வுயிர் சத்தும் ஆகாமல் அசத்தும் ஆகாமல் சதசத்தாய் நிற்கும் இயல்பினது.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 17

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026