திருவருட்பயன் | Thiruvarutpayan

அவனுக்கு மேலானதொரு பொருளில்லை

பதம் பிரித்துஉள்ளபடியே
பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன்
இல்லாதான் எங்கள் இறை.
பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ
னில்லாதா னெங்க ளிறை.
பொருள் : உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன்.

திருவருட்பயன் > முதல் அதிகாரம் > 1. பதிமுது நிலை > பாடல்: 6

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026